கழிவுநீராக மாறிய நங்காஞ்சி ஆறு

கரூர் மாவட்டம் வழியாக செல்லும் நங்காஞ்சி ஆற்றை தூர்வார வேண்டும் என அரவக்குறிச்சி தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கழிவுநீராக மாறிய நங்காஞ்சி ஆறு
x
கரூர் மாவட்டம் வழியாக செல்லும் நங்காஞ்சி ஆற்றை தூர்வார வேண்டும் என அரவக்குறிச்சி தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  போதுமான தண்ணீரின்றி தவிப்பதாக அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். முன்பு ஒரு காலத்தில் விவசாயத்திற்கு
ஆதாரமாக விளங்கிய நங்காஞ்சி ஆறு, தற்போது சாக்கடை நீராக மாறிவிட்டதை சுட்டிக்காட்டினர். ஒவ்வொரு தேர்தலின் போது நங்காஞ்சி ஆறு தூர்வாரப்படும் என வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்துவிட்டு, நிறைவேற்ற தவறுவதாக குற்றம் சாட்டினர்.  நங்காஞ்சி ஆற்றை தூர்வாரி தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்