வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் கொள்ளை
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்மநபர்களை கொள்ளையடித்து சென்றனர்.
தனியார் மில் ஒன்றில் அலுவலராக இருந்து ஓய்வு பெற்ற ரவீந்தின் என்பவரது வீட்டில் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் குறித்து, உடுமலை டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் குற்றப்பிரிவு ஆய்வாளர் பாண்டியம்மாள் உள்ளிட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தடய அறிவியல் துறையினரும் மோப்ப நாய் உடன் சம்பவ இடத்தை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Next Story