5 வயது சிறுமி பாலியல் கொடுமையால் கொல்லப்பட்ட வழக்கு : குற்றவாளி மகேந்திரனுக்கு 3 ஆயுள் தண்டனை
கோவையில் ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபருக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு காந்தி பார்க் பகுதியை சேர்ந்த ஐந்து வயது பெண் குழந்தையை மகேந்திரன் பாலியல் பலத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இது குறித்த வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி தேவி ஒரு ஆயுள் தண்டனைக்கு ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 3,000 ரூபாய் அபராதம் விதித்தார். தீர்ப்பிற்கு பிறகும் மகேந்திரனை போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர்.
Next Story