42 நாட்களுக்கு பிறகு தலைமை செயலகம் வந்த முதலமைச்சர்
முதலமைச்சர் பழனிசாமி, 42 நாட்களுக்குப் பிறகு திங்கட்கிழமையன்று, தலைமைச்செயலகம் வந்தார்
தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, 42 நாட்களுக்குப் பிறகு, திங்கட்கிழமையன்று, தலைமைச்செயலகம் வந்தார்.தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், கடந்த மார்ச் மாதம் 11 ஆம் தேதி முதல், தலைமைசெயலகத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி வராமல் இருந்தார். இந்நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், அவர் இன்று காலை 10 மணியளவில் தலைமைச் செயலகத்துக்கு வந்து, அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.பின்னர், பிற்பகல் ஒன்றரை மணியளவில் அவர் தமது இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்.
Next Story