16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு

வேளாங்கண்ணி அருகே சிறுமியை தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு தர்ம அடி கொடுத்து, பொதுமக்களே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்
16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு
x
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே சிறுமியை தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு தர்ம அடி கொடுத்து, பொதுமக்களே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். வடக்கு பொய்கைநல்லூர் கிராமத்தை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை,குணமூர்த்தி என்பவர், கடத்தி,பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இது குறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் குணமூர்த்திக்கு தர்ம அடி கொடுத்து வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.குணமூர்த்தி மீது சிறுமியை கடத்தியது, பாலியல் தொல்லை கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த, போலீசார்,போஸ்கோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்