பொன்பரப்பியில் உடைக்கப்பட்ட வீடுகள் சீரமைப்பு : போலீஸ் பாதுகாப்புடன், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பொன்பரப்பியில், கலவரத்தில் உடைக்கப்பட்ட வீடுகளை, போலீசார் பாதுகாப்புடன் சரிசெய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.
பொன்பரப்பியில் உடைக்கப்பட்ட வீடுகள் சீரமைப்பு : போலீஸ் பாதுகாப்புடன், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை
x
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பொன்பரப்பியில், கலவரத்தில் உடைக்கப்பட்ட வீடுகளை, போலீசார் பாதுகாப்புடன் சரிசெய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. கடந்த 18 ஆம் தேதி, தேர்தலின் போது, குறிப்பிட்ட ஒருபிரிவினர் வசிக்கும் பகுதியில் மற்றொரு பிரிவினர் தாக்குதல் நடத்தி வீடுகளை உடைத்தனர். இருதரப்பினரிடையே நேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, சேதமடைந்த வீடுகளின் ஓடுகளை மாற்றி, உள்ளாட்சி துறை பணியாளர்கள் மூலம் சீரமைப்பு பணி நடைபெறுகிறது. 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்