மகனை கொன்று தற்கொலை என நாடகமாடிய தந்தை : தந்தை, தாய், 2 சகோதரர்கள் கைது
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில், கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடிய தாய், தந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஐயன்பேட்டையை சேர்ந்த, ஓய்வு பெற்ற அரசு ஊழியரான, மணி என்பவரது, மகன் மகேஷ். சிங்கப்பூரில் பணியாற்றி வந்த மகேஷ், கடந்த இரு நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்து குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். இவர் மதுபோதையில், தமது தந்தை மற்றும் இரு சகோதரர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர் கடுமையாக தாக்கியதில் மகேஷ் உயிரிழந்தார். பின்னர், மகேஷை அவரது குடும்பத்தினர், மின்விசிறியில் கயிறு மூலம் தொங்க விட்டு தற்கொலை என நாடகமாடியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் மணிமாறன் நடத்திய விசாரணையில், மகேஷ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. உடனே, தந்தை மணி மற்றும் தாய் தமிழ்ச்செல்வி, மகன்கள் மோகனவேல், ரமேஷ் ஆகிய 4 பேரை கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story