கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசல் - 7 பேர் உயிரிழப்பு, 10 பேர் படுகாயம்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர்.
கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசல்  - 7 பேர் உயிரிழப்பு, 10 பேர் படுகாயம்
x
துறையூர் அருகே  முத்தையம்பாளையம்  கிராமத்தில் உள்ள கருப்பு சாமி கோயிலில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்ய திரண்டனர். அப்போது,  பக்தர்களுக்கு கைப்பிடி காசு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, பூசாரியிடம் காசு வாங்குவதற்காக, பக்தர்கள் முயன்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உள்பட  7 பேர் உயிரிழந்தனர். மேலும் , 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.காயமடைந்த அனைவரும்  துறையூர்  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவர் மேல் சிகிச்சைக்காக 
திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இது தவிர , கூட்ட நெரிசலில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்