"அதிகாரி நுழைந்தது, சீல் வைக்கப்பட்ட அறை அல்ல" - சத்யபிரதா சாஹூ

மதுரையில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைந்த பெண் அதிகாரி சம்பூர்ணம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
x
மதுரையில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைந்த பெண் அதிகாரி சம்பூர்ணம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் பெண் அதிகாரி சம்பூர்ணம் சென்றதாக புகார் எழுந்த நிலையில், இது குறித்து தொடர் விசாரணை நடைபெறுவதாக, தேர்தல் ஆணையத்துக்கு மதுரை ஆட்சியர் அளித்துள்ள முதல்கட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, அதிகாரி சம்பூர்ணம் நுழைந்தது சீல் வைக்கப்பட்ட அறை அல்ல எனவும் அங்கு தபால் வாக்குகளும் இல்லை எனவும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்