"வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரி சென்றது தவறு" - பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பேட்டி

மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு பெண் அதிகாரி சென்றது தவறு என்றும், வேண்டுமென்றால் அனுமதி பெற்று சென்றிருக்க வேண்டும் என்றும் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்தார்.
x
மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு பெண் அதிகாரி சென்றது தவறு என்றும், வேண்டுமென்றால் அனுமதி பெற்று சென்றிருக்க வேண்டும் என்றும் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பொன் அமராவதி, பொன் பரப்பி ஆகிய இடங்களில் நடந்த சம்பவங்கள் கவலை அளிப்பதாகவும், ஜாதி, மத கலவரங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்றும், எந்த நாடாக இருந்தாலும் கலவரத்தை அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.   


Next Story

மேலும் செய்திகள்