பேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி : பேருந்துக்காக காத்திருந்த 3 பேர் உயிரிழப்பு

சென்னை மணப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.
பேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி : பேருந்துக்காக காத்திருந்த 3 பேர் உயிரிழப்பு
x
மணல் ஏற்றி கொண்டு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி ஒன்று, வந்து கொண்டிருந்தது. அப்போது மணப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தின் அருகே சென்று கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தினுள் புகுந்தது. அங்கு பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும் தீயணைப்பு துறையினரும் இயந்திரத்தின் உதவியுடன்  3 பேரின் உடல்களை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். லாரி ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், அவர் மது போதையில் வாகனத்தை ஓட்டினாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்