4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்

அதிமுக சார்பில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இன்று விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது
4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்
x
அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏராளமானோர் ஆர்வமுடன் விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர். இன்று மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுக்கள் அளித்தவர்களுக்கு நேர்காணல் குறித்த அறிவிப்பு இன்றே அறிவிக்கப்படும் என  தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்