குற்றால அருவிகளில் மிதமான நீர்வரத்து : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து தொடங்கியுள்ளது.
குற்றால அருவிகளில் மிதமான நீர்வரத்து : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
x
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. நேற்று மாலை தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான சாரல் மழை பெய்தது. குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் மிதமான நீவரத்து வர தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்