பாழடைந்த கட்ட‌டத்தில் வெடித்த நாட்டு வெடிகுண்டு : வெடிக்காத நாட்டு வெடி குண்டுகளும் சிக்கின

பெரம்பூர் அருகே பாழடைந்த கட்ட‌டத்தில் திடீரென வெடித்த நாட்டு வெடிகுண்டுகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாழடைந்த கட்ட‌டத்தில் வெடித்த நாட்டு வெடிகுண்டு : வெடிக்காத நாட்டு வெடி குண்டுகளும் சிக்கின
x
சென்னை பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரில் உள்ள பாழடைந்த கட்ட‌டத்தில் பயங்கர சத்த‌த்துடன் நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது. இதில் அருகே விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுமிக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த வெடிகுண்டு தடுப்பு பிரவு போலீசார், மோப்பநாய் உதவியுடன் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வெடிக்காத மேலும், 2 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் குறித்து, ஐ.சி.எப். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்