தூத்துக்குடியில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த‌வர் படுகொலை : சிசிடிவி காட்சிகள் சிக்கியது

தூத்துக்குடியில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த நபர் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த‌வர் படுகொலை : சிசிடிவி காட்சிகள் சிக்கியது
x
தூத்துக்குடியில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த நபர் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி பக்கில்புரம் பகுதியை சேர்ந்த மோகன், தேனியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக மோகன் தனது சொந்த ஊரான பக்கில்புரம் வந்துள்ளார். இவர் மீது 2011 ஆம் ஆண்டு நடந்த அடிதடி சம்பவம் தொடர்பாக வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. வாக்களித்து விட்டு, அந்த வழக்கில் ஆஜராவதற்காக, சொந்த ஊரில் தங்கிய மோகனை, இருசக்கரவாகனத்தில் வந்த இரண்டு பேர் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர். சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்