கிணறு வெட்டும் போது கிரேன் கயிறு அறுந்து விபத்து : 5 தொழிலாளர்கள் பலி

திருவண்ணாமலையில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது, கிரேன் கயிறு அறுந்து, மண் அள்ள பயன்படும் இரும்பு தட்டு விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
கிணறு வெட்டும் போது கிரேன் கயிறு அறுந்து விபத்து : 5 தொழிலாளர்கள் பலி
x
திருவண்ணாமலையில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது, கிரேன் கயிறு அறுந்து, மண் அள்ள பயன்படும் இரும்பு தட்டு விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். ஆலத்தூரில், தனியார் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் கிணறு வெட்டும் பணி நடைபெற்ற போது, இந்த விபத்து நிகழ்ந்தது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் உடலை எடுத்து சென்று திருவண்ணாமலை- காஞ்சிபுரம் சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து, மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பள்ளி பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், மறியல் கைவிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்