இருநாட்டு மீனவர்களும் எல்லை தாண்டுகின்றனர் - ரவீந்திர சமரவீரா

மீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரத்திற்கு, பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணலாம் என, இலங்கை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரவீந்திர சமரவீரா தெரிவித்துள்ளார்.
இருநாட்டு மீனவர்களும் எல்லை தாண்டுகின்றனர் - ரவீந்திர சமரவீரா
x
புனித வெள்ளியை முன்னிட்டு நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு வந்த இலங்கை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரவீந்திர சமரவீர, குடும்பத்துடன் வழிபட்டார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய, இலங்கை ஆகிய இரு நாட்டு மீனவர்களும், எல்லை தாண்டுகின்றனர் என்றார். எல்லை தாண்டுவதை கடலோர காவல்படை மூலம் தடுப்பதாக கூறிய அவர், எனினும், இந்திய, இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டுதல் தொடர்ந்து வருவதாக கூறினார். இந்த விவகாரத்திற்கு, பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணலாம் என இலங்கை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரவீந்திர சமரவீரா  கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்