இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விவகாரம் - வடசென்னை திமுக வேட்பாளர் மகன் கைது
காவல் உதவி ஆய்வாளர் இருசக்கர வாகனம் மீது கார் மோதியது தொடர்பாக வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதியின் மகன் சித்தார்த் கைது செய்யப்பட்டார்
எழும்பூர் நோக்கி காரில் சென்ற போது சித்தார்த் சென்ற கார் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஜெயபாலனின் இருசக்கர வாகனம் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஜெயபாலன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். இதுதொடர்பாக சித்தார்த்தை கைது செய்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அவரது காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
Next Story