டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு நாள் - காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் அன்னதானம்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாகர்கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு நாள் - காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் அன்னதானம்
x
வெட்டூர்ணிமடம் சந்திப்பில் காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் அதன் தலைவர் சிலம்பு சுரேஷ் அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

சிவந்தி ஆதித்தனார் 6 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி



கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சிவந்தி ஆதித்தனாரின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி அவரது திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.தமிழகம் முழுவதும் சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் தினத்தந்தி அலுவலகத்தில் அதன் மேலாளர் பாலகிருஷ்ண‌ன் தலைமையில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவரது திரு உருவ படத்தை மலர்களால் அலங்கரித்த ஊழியர்கள், மலர் தூவி மரியாதை செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்