பொன்னமராவதியில் 144 தடையுத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள 49 வருவாய் கிராமங்களில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொன்னமராவதியில் 144 தடையுத்தரவு
x
குறிப்பிட்ட சமூகம் தொடர்பாக சமூக வலைதளத்தில்  ஆடியோ ஒன்று இரு நாட்களுக்கு முன்பு வெளியானது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னமராவதி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் பொன்னமராவதி உள்ளிட்  49 வருவாய் கிராமங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி,பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது அமைதியான சூழல் நிலவுவதாகவும்,பாதுகாப்பு கருதி அங்கு 800க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.அமைதியை நிலைநாட்டும் பொருட்டு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு முதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார்.மூன்று நாட்களுக்குப் பிறகு சூழ்நிலையைப் பொறுத்து 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்