கனமழை, கார் மேகமூட்டம் - குளிர்ச்சியில் கன்னியாகுமரி

கன்னியாகுமரியை குளிர்விக்கும் வகையில் கனமழை அவ்வப்போது பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கனமழை, கார் மேகமூட்டம் - குளிர்ச்சியில் கன்னியாகுமரி
x
கடந்த சில நாட்களாக கனமழையும், கார் மேகமூட்டமாக இருப்பதால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கோடை மழை தொடர்ந்து பெய்து குமரியை குளிர்விக்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காணப்படுகின்றனர்.

காலையில் வைகையில் இறங்கிய கள்ளழகர் - மாலையில் மழையால் குளிர்ந்த மதுரை



மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சுட்டெரிக்கும் சூரிய வெயிலால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளான நிலையில், திடிரென  அப்பகுதியில் மழை பெய்தது.தெற்குதெரு, நாவினிபட்டி, சூரக்குண்டு, எட்டிமங்களம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை சுமார் 1 மணிநேரம் கொட்டி தீர்த்தது.கோடைமழையை கண்டதும் உற்சாக மிகுதியில் மகிழ்ச்சியடைந்து சிலர் நனைந்து ரசித்தனர்.காலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கிய நிலையில்,மாலையில் மழை பெய்தது இளைவனின் செயலே என பக்தர்கள் கருதுகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்