சமூக நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் சுயநல சக்திகள் : இரும்புக் கரம் கொண்டு அடக்கிட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்

சமூக நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் சுயநல சக்திகள் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சமூக நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் சுயநல சக்திகள் : இரும்புக் கரம் கொண்டு அடக்கிட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் 20-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோரின் வீடுகள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டதையும், அப்பாவி மக்கள் பலர் தாக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆம்பூர் பகுதியில் வாக்குசாவடியைக் கைப்பற்ற முயற்சி நடைபெற்று துப்பாக்கிச்சூடு வரை சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் வாக்குச்சாவடியை கைப்பற்றி வாக்களித்தது தொடர்பாக நாளேடுகளில் வெளியான செய்திகளையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டுவதில் மாவட்டப் போலீஸ் அதிகாரிகள் மெத்தனமாக இருக்காமல் பொது அமைதியை நிலைநாட்டிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியையும், டி.ஜி.பி.யையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்