தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்...

தமிழகத்தில் மே 19ஆம் தேதி நடைபெற உள்ள அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான தி.மு.க பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்...
x
தமிழகத்தில் மே 19ஆம் தேதி நடைபெற உள்ள அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான தி.மு.க பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்களாக இ.பெரியசாமி, மணிமாறனும், உறுப்பினர்களாக தங்கம் தென்னரசு, பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் ஒட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர்களாகவும், கனிமொழி, மா.சுப்பிரமணியன் எஸ்.ஆஸ்டின், கீதா ஜீவன் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். அரவக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தி.மு.க பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். சூலூர் தொகுதி பொறுப்பாளர்கள் எ.வ.வேலு, தென்றல் செல்வராஜும், உறுப்பினர்களாக ஆ.ராசா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் க.அன்பழகன் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்