வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் - பாதுகாப்பை ஆய்வு செய்த சென்னை காவல் ஆணையர்

வடசென்னை தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் - பாதுகாப்பை ஆய்வு செய்த சென்னை காவல் ஆணையர்
x
வடசென்னை மக்களவை தொகுதி மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சென்னை கடற்கரை சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு  7அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.இங்கு மே 23ம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட உள்ளன.இதையடுத்து, ஒவ்வொரு அறைக்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் 4 பேரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும்,  துணை ஆணையர்கள் இருவர், மூன்று உதவி ஆணையர்கள், 6 ஆய்வாளர்கள்  சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள்.சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று இரவு பார்வையிட்டார்

Next Story

மேலும் செய்திகள்