திமுக பிரமுகரின் மருமகன் ஓட ஓட வெட்டிப் படுகொலை
மதுரையில் முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகரின் மருமகன் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுரை காமராசர்புரத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் குருசாமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான ராஜபாண்டி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 2010 முதல் இரு தரப்பினருக்கும் இடையே மாறி மாறி நடந்து வரும் மோதலில் இதுவரை 12 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், மதுரை சிந்தாமணி பகுதியில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் குருசாமியின் மருமகன் எம்எஸ் பாண்டியன் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் அவரைச் சுற்றி வளைத்து கொடூரமாக வெட்டியது. அவர்களிடமிருந்து தப்பி ஓடியவரை விராமல் துரத்திச் சென்று அருகில் ஒரு வீட்டிற்குள் வைத்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளது.உயிருக்கு போராடியவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில், பட்டப்படகலில் நடந்த படுகொலை சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story