49P அடிப்படையில் வாக்களித்த இருவர்

சர்கார் பட பாணியில் நடந்த சம்பவம்
49P அடிப்படையில் வாக்களித்த இருவர்
x
கோவையில் இளைஞர்கள் இருவரின் வாக்கை மற்றொருவர் போட்டதை அடுத்து, 'சர்கார்' பட பாணியில் '49 P' அடிப்படையில் தபால் வாக்காக இருவருக்கும் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.  போத்தனூர் சித்தன்னபுரம் அரசு துவக்கப்பள்ளியில் வாக்களிக்க சென்ற அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் கிருஸ்ணராஜ் மற்றும் பீளமேடு பி.எஸ்.ஜி. தொடக்கப் பள்ளியில் வாக்களிக்க சென்ற கார்த்திகேயன் ஆகிய இருவரின் வாக்கை ஏற்கனவே வேறொருவர் செலுத்தியதாக கூறப்படுகிறது.இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இருவருக்கும் மறு வாய்ப்பாக தபால் வாக்கு மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்