வாக்குப்பதிவு பொத்தான் உடைந்தது - 3 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம்

பண்ருட்டி அருகே வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தான் உடைந்ததால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது
வாக்குப்பதிவு பொத்தான் உடைந்தது - 3 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம்
x
திருவதிகை அரசு பள்ளியில்  வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், பிற்பகல் பனிரெண்டரை மணி அளவில் அமமுக வேட்பாளர் காசி தங்கவேல் பெயருக்கு நேராக உள்ள நீல நிற பொத்தான் உடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து வாக்குவாதம் ஏற்பட்டதால் வாக்குப் பதிவு உடனடியாக நிறுத்தப்பட்டது.புதிதாக மாற்று இயந்திரம் பொருத்துவதற்கும் அமமுக வேட்பாளர் ஒப்புக் கொள்ளாததால் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

Next Story

மேலும் செய்திகள்