'ஸ்டண்ட் யூனியன்' 52 வது ஆண்டு விழா' - மரகன்றுகள் வழங்கி கொண்டாட்டம்
தென்னிந்திய திரைப்பட ஸ்டண்ட் யூனியன் சார்பில் 52ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
தென்னிந்திய திரைப்பட ஸ்டண்ட் யூனியன் சார்பில் 52ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சமுத்திரகனி , கலைப்புலி தாணு, ஜாகுவார் தங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஸ்டண்ட் இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்கும் மரக்கன்றுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இது குறித்து பேசிய நடிகர் சமுத்திரகனி, "மரம் வளர்ப்பது குழந்தையை உருவாக்குவது போல் என்றும், அது அடுத்த தலைமுறையினரை காப்பாற்றும் எனவும் கூறினார். இதர சங்கங்கள் சார்பிலும் மரக்கன்றுகள் வழங்க வேண்டும் என்றும் சமுத்திரகனி கேட்டுக் கொண்டார்.
Next Story