கூத்தாண்டவர் கோயில் திருவிழா : கூத்தாண்டவருக்கு முன் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

புதுச்சேரி பிள்ளையார் குப்பம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில், வழக்கமாக நடைபெறும் திருநங்கைகளுக்கான ஆடை - அலங்கார போட்டி தேர்தலை முன்னிட்டு ரத்து செய்யப்பட்டது.
கூத்தாண்டவர் கோயில் திருவிழா : கூத்தாண்டவருக்கு முன் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்
x
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கையர் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திருநங்கைகள் கூத்தாண்டவருக்கு முன் தாலி கட்டிக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து  நடைபெறுவதாக இருந்த ஆடை அலங்காரப் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனை காண வந்த ஏராளமான  பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


திருத்தணி முருகன் கோவில் தேரோட்டம்
திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவையொட்டி தேரோட்டம் நேற்று நடைபெற்றது.இதில் புதிதாக உருவாக்கப்பட்ட மரத்தேரில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற19ம் தேதியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

தந்தி மாரியம்மன் கோயில் திருத்தேர் உற்சவம் : கோலாட்டம் ஆடியவாறு பக்தர்கள் உற்சாக ஊர்வலம்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தந்தி  மாரியம்மன் கோயில் திருதேரோட்ட உற்சவ விழா வெகு விமர்சையாக  நடைப்பெற்றது. ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி மே முதல் வரை நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மாரியம்மன் கோவில் திருவிழா அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள்
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள  மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக   நடைபெற்றது.இதில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் பக்தர்கள் பால் குடம், காவடி, தீச்சட்டி எடுத்து அலகு குத்தி தங்களது  நேர்த்தி கடன்களை செலுத்தினர்.



Next Story

மேலும் செய்திகள்