"சென்னையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்" - மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தகவல்

சென்னை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்,மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
சென்னையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் - மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தகவல்
x
சென்னை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. தேர்தல் பார்வையாளர்கள், மாநகர காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் உட்பட பல அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும், பிரசார நேரம் முடிந்த பிறகு, எந்த ஒரு அரசியல் கட்சியினரும் பிரசாரம் செய்வதோ, விளம்பரங்கள் வெளியிடுவதோ கூடாது  எனவும் தெரிவித்தார். இதேபோல, அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடப்பதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்