விமான நிலைய பெண் ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தாரா ? - போலீசார் விசாரணை
விமான நிலைய பெண் ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
x
சென்னையில், விமான நிலைய சுங்க சாவடியில் கட்டணம் வசூல் செய்யும் பெண் ஊழியர், மயங்கி விழுந்து உயிரிழந்தார்.சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கும் பணியை தனியார் நிறுவனம் செய்து வருகிறது.இதில் பணியாற்றி வந்த திரிசூலத்தை சேர்ந்த அருள் என்பவரது மனைவி கவுரி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்,கடுமையான வெயில் காரணமாக கவுரி உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்