ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
பயோ மெட்ரிக் வருகை பதிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு பிறபித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள ஆசிரியர்,மாணவர்களுக்கு  எப்படி ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பார் என எதிர்பார்க்க முடியும் என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சரிப்பார்க்க வேண்டும் எனவும், ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்