கோவையில் தனியார் புகைப்பட ஸ்டூடியோவில் கட்டுக்கட்டாக பணமா ?

தனியார் புகைப்பட நிறுவனத்தில் பணம் பதுக்கல் என தகவல்
x
கோவையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஜீரோ கிராவிட்டி போட்டோகிராபி என்னும் புகைப்படம் எடுக்கும் நிறுவனத்தில் பணம் பதுக்கப்பட்டு உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்றிரவு வருமான வரித்துறையினர் சோதனை நடத்த வந்துள்ளனர். அந்த நிறுவன உரிமையாளர் அஜய் பெஞ்சமின், இல்லாததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.  இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல அந்த நிறுவனம் திறக்கப்பட்டது. அதிகாரிகள் எந்த நேரத்திலும் சோதனைக்கு வரலாம் என்ற நிலையில், வாடிக்கையாளர்கள் நிறுவனத்துக்கு உள்ளே செல்லும் போதும், வெளியே வரும் போதும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான நிலை காணப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்