போதையில் நடன கலைஞர்களிடம் வாக்கு கேட்ட முதியவர்

நாமக்கல் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேந்தமங்கலம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்தார்.
போதையில் நடன கலைஞர்களிடம் வாக்கு கேட்ட முதியவர்
x
முதலமைச்சர் வருவதற்கு முன்னதாகவே ஏராளமான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் காத்திருந்தனர். அவர்களை மகிழ்விக்க நடனகலைஞர்கள் பல பாடல்களுக்கு நடனமாடினர். அப்போது கையில் அதிமுக கொடியுடன் மது போதையில் முதியவர் ஒருவர் நடன கலைஞர்களிடம் வாக்கு கேட்டார். இந்த சம்பவத்தால் அங்கு சிரிப்பலைகள் ஏற்பட்டன. முதலமைச்சர் வருகையை தொடர்ந்து போதை ஆசாமிகள் அப்புறப்படுத்தப்பட்டனர்.  


Next Story

மேலும் செய்திகள்