தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அரசு நிலத்தில் நினைவுத் தூண் அமைக்க கோரிக்கை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அரசு நிலத்தில் நினைவுத் தூண் அமைக்க கோரிக்கை
x
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் தாக்கல் செய்துள்ள மனுவில் அரசு இடம் ஒதுக்கி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு தூண் அமைக்க கோரியுள்ளனர். ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு  ஆதரவு அளித்தவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் வேறு யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை என்றும் கூறினர். நடைபெற உள்ள தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கோரியுள்ள ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மே 22 ஆம் தேதியோடு போராட்டம் நடைபெற்று ஓராண்டு ஆவதை ஒட்டி நினைவுத் தூண் அமைப்பது  உள்ளிட்ட கோரிக்கை மனுவை அளித்துள்ளதாக கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்