பெண் போல் உடையணிந்து இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே பெண் போல் உடையணிந்து இன்ஜினியரிங் மாணவர் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் போல் உடையணிந்து இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை
x
கோவை  மத்தம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த  எபின் ராபர்ட் என்ற இளைஞர் மூன்றாமாண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்த எபின் ராவர்ட் நேற்று இரவு விடுது அறையில் யாரும் இல்லாத நேரத்தில் சேலை அணிந்த நிலையில்  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் எபின் ராவர்ட்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். எபின் ராவர்ட் நீண்ட நாட்களாகவே பெண்ணாக மாற வேண்டும் என ஆசைப்பட்டதாகவும் ஆனால் அந்த ஆசை நிறைவேறாததால்  சேலை மற்றும் ஜாக்கெட் அணிந்து  தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.  

Next Story

மேலும் செய்திகள்