தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை - தி.மு.க. அதிருப்தி

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் இன்று மீண்டும் தி.மு.க. மனு அளித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை - தி.மு.க. அதிருப்தி
x
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ள அந்த மனுவில், தேர்தல் ஆணைய செயல்பாடுகள் பாரபட்சமாக இருப்பதாகவும், தாங்கள் இதுவரை அளித்த புகார் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இதுவரை எந்த பதிலும் ஆணையத்திடம் இருந்து வரவில்லை என சுட்டிக்காட்டி உள்ளார். சென்னை காவல் ஆணையர், கூடுதல், இணை மற்றும் துணை ஆணையர்கள் மற்றும் சேலம் உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியர்கள் ஆகிய அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை என்றும், காலம் குறைவாக உள்ள நிலையில் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தை நாடி தேவையான உத்தரவு பெற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அதில் தி.மு.க. சுட்டிக்காட்டி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்