வருமான வரி சோதனை தொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

வேலூர் வருமான வரிச்சோதனை தொடர்பாககாட்பாடி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார்.
வருமான வரி சோதனை தொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு :  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்
x
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உரிய ஆவணங்கள் இல்லாததால் 124 கோடியே 63 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது  என்றும், நேற்று மட்டும் இரண்டு கோடியே 33 லட்சம்  பணம் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இதேபோன்று 283 கோடி ரூபாய் மதிப்பிலான 989.6 கிலோ தங்கம் மற்றும் 492.3 கிலோ வெள்ளியும் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் சத்யபிரத சாகு தெரிவித்தார். மேலும், தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை நான்காயிரத்து 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், தேர்தலை கண்காணிக்க ஏழாயிரத்து 280 நுண்பார்வையாளர்கள்  நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு இடையிலான நாட்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்றும் சூலூர், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதி இடைத் தேர்தல்  நடைபெற இருப்பதால் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தொடரும் என்றும் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்