கள்ளக்காதல் - மனைவியை கொலை செய்த கணவன்

கிருஷ்ணகிரி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதல் - மனைவியை கொலை செய்த கணவன்
x
கிருஷ்ணகிரி மாவட்டம் திப்பனப்பள்ளியைச் சேர்ந்தவர் ராஜேஷ். கடந்த 5-ம் தேதி இவரது மனைவி கவுதமி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், ராஜேஷிற்கும், கர்நாடக மாநிலம் தும்கூரை சேர்ந்த கலைவாணிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து, கணவரை கவுதமி கண்டித்தது வந்துள்ளார். இதனால் ராஜேஸ், மனைவியை தலையணையை அமுக்கி கொன்றுள்ளார். இதனையடுத்து ராஜேஷை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். கள்ளக்காதலி தூண்டுதலின் பேரில், மனைவி கவுதமியை கொலை செய்ததாக ராஜேஷ் கூறியுள்ளார். இதையடுத்து ராஜேசையும், கலைவாணியையும் போலீசார் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்