விமரிசையாக நடைபெற்ற திருச்சி மாரியம்மன் கோயில் திருவிழா

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பில் மாரியம்மன் கோயில் உள்ளது.
விமரிசையாக நடைபெற்ற திருச்சி மாரியம்மன் கோயில் திருவிழா
x
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 2 ம் தேதி காப்பு கட்டபட்டு திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் அருகே உள்ள குளத்தில் அம்மன் கரகம் சுமந்து அருள்பாலித்து வர பெண்கள் மாவிளக்கு, முளைப்பாரி எடுத்துக் கொண்டு  பக்தி பரவசத்துடன் சென்றனர்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில்  ஆண்கள் பலர்  வேடமிட்டு கிராம மக்களிடம் குறும்பு செய்தனர்.நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக வாணவேடிக்கைகள் நடைபெற்றதால் கிராமம் முழுவதும் விழா கோலம் பூண்டு இருந்தது.

Next Story

மேலும் செய்திகள்