கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக வதந்தி : வதந்தி பரப்பிய நபர் மீது வழக்கு பதிவு

கோவை டீத்தூள் கொண்டுசென்ற கண்டெயினர் லாரியில்,பணம் இருப்பதாக வதந்தி பரப்பிய மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவர் மீது வழக்கு பதவி செய்யப்பட்டுள்ளது.
கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக வதந்தி : வதந்தி பரப்பிய நபர் மீது  வழக்கு பதிவு
x
நேற்றிரவு கோவை ஆத்துப்பாலம் டோல்கேட் அருகே சமுகமது சாஜித், கண்டெய்னர் லாரி ஓட்டுனரை வழிமறித்து லாரியில் பணம் இருப்பதாக மிரட்டியுள்ளனர். பொதுமக்களிடையே தவறான தகவலைப் பரப்பியதன் காரணத்தினால்,  சட்ட ஒழுங்கு பாதிக்கும் அளவில் செயல்பட்ட அவர் மீது 6 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சமந்தப்பட்ட மற்ற நபர்களை போலீசார் தேடி வரும் நிலையில், தகவலறிந்து அந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடியதால்,  சுமார் நான்கு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்