வறுமை காரணமாக ஆடு மேய்க்க அனுப்பப்பட்ட சிறுவர்கள் : அதிரடியாக மீட்ட வருவாய் கோட்டாட்சியர்

வறுமையின் காரணமாக கொத்தடிமையாக ஆடு மேய்க்க அனுப்பப் பட்ட ஐந்து சிறுவர்கள் நாகை அருகே அதிரடியாக மீட்கப்பட்டுள்ளனர் .
வறுமை காரணமாக ஆடு மேய்க்க அனுப்பப்பட்ட சிறுவர்கள் : அதிரடியாக மீட்ட வருவாய் கோட்டாட்சியர்
x
விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கமடம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் ராமநாதபுரம் மாவட்டம் முத்துகிருஷ்ணன் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு தனது மகன்கள் ஐந்து பேர்களை  ஆடு மேய்க்கும் வேலைக்கு  அனுப்பி வைத்துள்ளார். ஆடும் மேய்ப்பதற்காக பல்வேறு ஊர்களுக்கு  சென்ற அவர்கள் நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்திற்கு  வந்தனர். சிறுவர்கள்  ஆடு மேய்ப்பதைக்  கண்ட திருக்கண்ணபுரம் கிராம மக்கள்  நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் கமல் கிஷோருக்கு இது குறித்து புகார் அளித்தனர், இது குறித்து நேரில் விசாரித்த, கிஷோர்  சிறுவர்களை கொத்தடிமையாக பணிக்கு அமர்த்திய பரமக்குடியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார் ..மாரி, கன்னியப்பன், திருப்பதி, சிவராஜ், சின்ராசு ஆகிய ஐந்து சிறுவர்களையும் கமல் கிஷோர்  மீட்டார்.  


Next Story

மேலும் செய்திகள்