ரயிலில் சிக்கிய முதியவரை காப்பாற்றிய கண்காணிப்பாளர் - பதைபதைக்க வைக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகள்

ரயில் இருந்து தவறி விழுந்தவரை, ரயில்வே கண்காணிப்பாளர் காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ரயிலில் சிக்கிய முதியவரை காப்பாற்றிய கண்காணிப்பாளர் - பதைபதைக்க வைக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகள்
x
ரயில் இருந்து தவறி விழுந்தவரை, ரயில்வே கண்காணிப்பாளர் காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோவை ரயில் நிலைய கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் விஜய் சிங் மீனா. இவர்  பணியில் இருந்தபோது,  திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் முதியவர் ஒருவர் ஏற முயன்ற போது கால் தவறி விழுந்து இழுத்துச் செல்லப்பட்டார்.இதனை பார்த்த விஜய் சிங் மீனா கண் இமைக்கும் நேரத்தில் துரிதமாக செயல்பட்டு முதியவரை காப்பாற்றினார்.இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்த நிலையில், ரயில்வே கோட்ட  நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு வெகுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அந்த சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்