புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி - தற்காலிக தண்ணீர் தொட்டிகள் கட்டும் பணி தீவிரம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வறட்சி நிலவுவதால் தண்ணீர் தொட்டிகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி - தற்காலிக தண்ணீர் தொட்டிகள் கட்டும் பணி தீவிரம்
x
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க தற்காலிக தண்ணீர் தொட்டிகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.கடந்த 4 மாதங்களாக மழை பெய்யாததால் சத்தியமங்கலம், பவானிசாகர்,ஆசனூர் உள்ளிட்ட 7 வனச்சரகங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.இதனால் வனவிலங்குகள் குடிநீரூக்காக வனத்தை விட்டு வெளியேறி கிராமங்களுக்குள் நுழைந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.ஏற்கனவே உள்ள தொட்டிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பி வரும் நிலையில், அதிகமாக வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் தொட்டிகள் கட்ட அனுமதி கிடைத்துள்ளது.இதனையடுத்து தற்போது காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே தற்காலிக தொட்டி கட்டப்பட்டு வருகிறது


Next Story

மேலும் செய்திகள்