"மிரட்டல்கள் வருவதால் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்" - சாதிக்பாட்சாவின் மனைவி உள்துறை செயலாளரிடம் மனு
மறைந்த சாதிக்பாட்சாவின் நினைவு நாளன்று அவரது குடும்பத்தினர் விளம்பரம் கொடுத்துள்ளனர்.
மறைந்த சாதிக்பாட்சாவின் நினைவு நாளன்று அவரது குடும்பத்தினர்
விளம்பரம் கொடுத்துள்ளனர். இதையடுத்து அவரது மனையின் கார் சேதப்படுத்தப்பட்டதாகவும், மிரட்டல்கள் வருவதாகவும் சென்னை மாநகர காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் சாதிக் பாட்சாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் சாதிக் பாட்சா மனைவி ரேகா பானு , உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியை சந்தித்து தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் மனு அளித்துள்ளார்.
Next Story