51வது முறையாக தேர்தலில் போட்டி : ஒருநாள் மக்கள் வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகிறேன்

50 முறை தேர்தல் போட்டியிட்டு தோல்வியடைந்த நாகர்கோவிலைச் சேர்ந்த தேர்தல் மன்னன் நாகூர் மீரான் வேட்புமனு தாக்கல் செய்தார்.
51வது முறையாக தேர்தலில் போட்டி : ஒருநாள் மக்கள் வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகிறேன்
x
50 முறை தேர்தல் போட்டியிட்டு தோல்வியடைந்த நாகர்கோவிலைச் சேர்ந்த தேர்தல் மன்னன் நாகூர் மீரான் வேட்புமனு தாக்கல் செய்தார்.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து காங்கேயம், ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தவர் இவர். எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய மட்டும் 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்துள்ளதாக கூறிய அவர்,கன்னியாகுமரியில் வெற்றிபெற்றால் ரப்பர் தொழிற்சாலை,சர்வதேச விமான நிலையம், துறைமுகம் கொண்டுவருவேன் என்றார். 1989 முதல் தேர்தலில் போட்டியிடும் தம்மை, திடீரென ஒருநாள் மக்கள் வெற்றிபெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் தேர்தலில் போட்டியிடுவதாக நாகூர் மீரான் தெரிவித்தார்.கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட்டால், அவரை எதிர்த்து தாம் போட்டியிட உள்ளதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்