திருச்சி சந்தையில் கஞ்சா வளர்ப்பதாக புகார் : போலீசார் விசாரணை
திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் சந்தையில் கஞ்சா செடி வளர்ப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் சந்தையில் கஞ்சா செடி வளர்ப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.அந்த தகவலின் அடிப்படையில் கண்டோன்மெண்ட் உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் அங்கு சோதனை நடத்தியுள்ளனர்.அப்போது அங்குள்ள அரசமரம் ஒன்றின் அருகில் கஞ்சா செடி இருந்துள்ளது. இதனை தொடர்ந்து ஷாகுல் ஹமீது, சக்திவேல் ஆகிய இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story