நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு விவகாரம் : மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்ற மதுரைக் கிளை உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு விவகாரம் : மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
x
நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்ற மதுரைக் கிளை உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, நீர் நிலைகளை ஆக்கிரமித்து வசிப்பவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கூடாது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. இதனைதொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசிப்பவர்கள், தெருக்களில் வசிப்பவர்களுக்கு வாக்குரிமையை மறுக்கும் சட்டப் பிரிவுகள் ஏதும் இல்லை எனவும், வாக்களிப்பது அரசியல் சாசன உரிமை எனவும் அரசியல் சாசனத்திற்கு முரணான இந்த அறிவுறுத்தல்களை பிறப்பிப்பது சிக்கலானது எனவும் தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளில் வசிப்பவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கூடாது என்ற மதுரை கிளை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்