3 தொகுதி இடைத்தேர்தல் வழக்கு : வரும் 28ம் தேதி விசாரணை- உச்சநீதிமன்றம் அறிவிப்பு

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் 28ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
x
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுடன்  சேர்த்து காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி, திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, 2 வாரங்களுக்குள் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருந்தார். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஆஜரான திமுக வழக்கறிஞர் வில்சன், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி முறையிட்டார். இதையடுத்து ஏப்ரல் 1-ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர இருந்த நிலையில், முன்னதாக வரும் 28ம் தேதியே வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்