இரவிலும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை...

சென்னையில் இரவிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
இரவிலும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை...
x
சென்னையில் இரவிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் குழு குழுவாக முகாமிட்ட அதிகாரிகள், வாகனங்களை மறித்து சோதனை செய்தனர். கார், லாரி உள்ளிட்ட வாகனங்களில் கொண்டுசெல்லப்பட்ட பணம், நகை, பொருட்களுக்கு முறையான ஆவணங்கள் இருக்கிறதா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த சோதனை செய்தனர்.  

விழுப்புரம் மாவட்டத்திலும், பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அங்கு நிலையான குழுக்கள், பறக்கும் படை குழுக்கள் மொத்தம் 66 குழுக்கள் தேர்தல் முறைகேடுகளை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கோலியனூர் பகுதியில் உள்ள சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் இரவில் முகாமிட்டு பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட வாகாங்களை மறித்து சோதனை செய்தனர். கொண்டுசெல்லப்படும் பொருட்களுக்கு முறையான ஆவணங்கள் உள்ளதா? என சரிபார்த்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்